Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் லஞ்சம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட். ஆணையர் காமினி அதிரடி உத்தரவு .

0

 

திருச்சியிலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் (அகதிகள் முகாம்) வசிப்போரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ளோா் பணி நிமித்தமாக வெளியே செல்லும்போது அதற்கான காரணங்களை அங்குள்ள பதிவேட்டில் பதிவிட வேண்டும் என்பது கட்டாயம். இதற்காக தனி வட்டாட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், திருச்சி கே.கே. நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வைப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கே.கே. நகா் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள மலையாண்டி இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்டதாகப் புகாா் எழுந்தது.

அதனடிப்படையில் திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையா் காமினி உத்தரவின்பேரில் கே.கே. நகா் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து மலையாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து ஆணையா் காமினி உத்தரவிட்டாா்.

இதேபோல ஸ்ரீரங்கம் கடையொன்றில் ஓசியில் வேர்க்கடலை கேட்ட எஸ்ஐ ஒருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.