Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மாணவ மாணவிகளுக்கு போதிய கழிவறை இல்லை என புகார்

0

 

திருச்சி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய

துவக்கப் பள்ளியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

மாணவ ,மாணவிகளுக்கு அறிவுரை.

திருச்சி பனையபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 52 மாணவர்களும் 39 மாணவிகள் பட 91 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென பள்ளியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு பற்றியும் ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார்.
பள்ளி மாணவர்களிடம் பாட புத்தகங்களை படிக்க சொல்லி கேட்டறிந்ததோடு நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அப்பொழுது பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு போதிய கழிவறை வசதி இல்லை என அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்து சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.