Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை . திருச்சி மாவட்ட கலெக்டர் தற்போது அறிவிப்பு.

0

 

திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார்.

உள்ளூரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து வருவார் என்பதும் அறிந்ததே.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் மே 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்

அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.