Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

0

 

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது.

அதன்பின்னா் வாக்குச்சாவடிகளில் முகவா்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவப்படையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள தனித்தனி அறைகளில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரும் பணிகள் தொடா்ந்தன. மற்ற பகுதிகளான கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து இயந்திரங்களைக் கொண்டு வந்து சோ்க்கும் பணிகள் நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றன. அனைத்துப் பகுதியிலிருந்தும் இயந்திரங்கள் வந்தபிறகு அறைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பிறகு வாக்கு எண்ணும் மையம் முழுமையாக பூட்டி சீல் வைக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.