Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரு வேளை மட்டுமே குடிநீர் விநியோகம். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திருச்சி மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்.

0

'- Advertisement -

 

கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால்

வார்டு 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு
ஒரு வேளை குடிநீர் விநியோகம்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

திருச்சி
மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5. மணி முதல் 6. மணி வரையிலும் இருவேளை வழங்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் , நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரானது மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது . ஆகையால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை , வார்டு எண் : 1 முதல் 7 வரை வார்டு படுதிகளுக்கு குடிநீரானது காலை 5.மணி முதல் 8. மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .

இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறுதிருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.