திருச்சி மத்திய சிறையில்
போக்சோ சட்டத்தில் கைதான முதியவர் சாவு.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேல பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 71 ).இவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சம்பவத்தன்று திடீரென்று இவர் சிறையில் மயங்கி விழுந்தார். உடனே சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார் .
இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.