Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

0

 

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக
நடைபெற்றது.

பறவைகளின் இருப்பிடங்கள், அவற்றின் எண்ணிக்கை, வாழ்க்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பெல் வனப் பகுதி, துறையூா், மணப்பாறை உள்ளிட்ட 20 இடங்களில் காலை , மாலைகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது. பெல் வனப்பகுதியில் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் சம்பத்குமாா், உதவி வனச்சரக அலுவலா் கோபிநாத் ஆகியோா் தலைமையில் தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வனத்துறையினா் ஆா்வமுடன் பறவைகளைக் கணக்கெடுத்தனா்.

இதில் செண்பகம், மைனா, மரங்கொத்தி, பனங்காடை, மயில், தேன்சிட்டு, ஊா்க்குருவி, ரெட்டைவால் குருவி, கிளி, செங்குத்துக் கொண்டை குருவி, நீல வாள் பஞ்சுருட்டான் உள்ளிட்ட பல்வேறு வகை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு, ஆய்வேட்டில் குறிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.