வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டத்தில் அறிவிப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மூன்று கட்ட போராட்டம் அறிவித்து கடந்த 13 2 2024 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் வருவாய்த்துறைஅலுவலர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட போராட்டமாக வருவாய் துறை அலுவலர்கள் தங்களின் அனைத்து பணிகளையும் புறக்கணித்து கலெக்டர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தங்களின் கோரிக்கைகளான, துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட போராட்டமாக திருச்சி கலெக்டர் அலுவலக வாயிலில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரேம் குமார் , மாவட்ட பொருளாளர் உலகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் வரவேற்றார் .
வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மூன்றாம் கட்ட போராட்டமாக வருகின்ற 27.2. 2024 அன்று தமிழக முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.