திருச்சி சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை .
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (வயது 46). பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இந்நிலையில் ஒத்தக்கை சண்முகம் சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தில் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோத ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இவர் எப்படி இறந்தார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.