ஆ ராசா வருத்தம் தெரிவிக்காவிட்டால் வரும் தேர்தலில் 146 அமைப்பும் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பிரச்சாரம் செய்வோம் . திருச்சியில் சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை .
இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினரும் ஆ.ராசா தவறான தகவலை பரப்புவதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தினர் கண்டனம்.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவு படுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். மேலும் வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். இந்தநிலையில் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக பரப்பியுள்ளனர். இது சுமார் 2½ கோடி பிள்ளைமார் சமுதாயத்தினரை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஆ.ராசாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவு படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க தங்கள் கட்சியினரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
வருகிற 25-ந்தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறோம் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியை ஆதரிக்க மாட்டோம்.
அதன் விளைவை தேர்தலில் சந்திப்பார்கள். ஆராசாவை முதல்-அமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்த கட்சியினர் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம். வெள்ளாளர் சமூகத்தில் 146 அமைப்புகள் உள்ளது. இவர்கள் அனைவரும் தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் .
கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. கட்சி செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர் என்பதை அனைவரும் அறிவார் என டாக்டர் செந்தில் பிள்ளை கூறினார் . பேட்டியின் போது அருகில் மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், மாநில துணைச் செயலாளர் பாடலூர் மாணிக்கம் , தொட்டியம் தியாகராஜன் பிள்ளை, திருச்சி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு மாநில செயற்குழு உறுப்பினர் கே பி டி பழனிவேல் , மாநில இளைஞரணி அமைப்பாளர் தங்கம் ரத்தினகுமார் , மாநில அமைப்பாளர்கள் டைமண்ட் பாலு , கு.ம.ரவி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.