திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அல்லித்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைப்புச் செயலாளர்கள் மனோகரன், வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் , எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளரும் புங்கனூர் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் தேவா , ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார், நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.