Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள்.

0

'- Advertisement -

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 01.02.2024, வியாழக்கிழமை காலை 10.00மணி அளவில் பெட்டவாய்த்தலை கடைவீதியில் நடைபெறும்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.