காந்தி மார்க்கெட்டில் கடலை மிட்டாய் வியாபாரி எலி மருந்து தின்று சாவு .
திருச்சி கே கே நகர் கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்சா (வயது 42) திருமணம் ஆகாதவர்.கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவன்று காதர் பாட்சா காந்தி மார்க்கெட் மீன் மார்க்கெட் அருகில் எலி மருந்து தின்று மயங்கி கிடந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காதர் பாட்ஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து காதர் பாட்சா
இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.