நாளை திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர். மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.
சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு
திருச்சி மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக சார்பில் வருகின்ற
நாளை 27.1.2024 சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் டி.வி.எஸ் டோல்கேட்
அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.