சென்னையிலிருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு பிரதமர், ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவில் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார். சுமார் 2.30 கிலோ மீட்டர் காரில் பயணமாக செல்லும் பிரதமர் மோடியை பாஜாகவினர் இருபுறமும் மலர் தூவி கலை நிகழ்ச்சிகளான பரதம், நடனம் ஆடி பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு பிரதமர் மோடிக்கு மரியாதை வழங்கப்படுவதை தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் அந்த சமயத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.