மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டு போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் .
மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி:
குத்துச்சண்டை போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம்
திருச்சி உறையூரில் உள்ள அரசு உதவி பெறும்
எஸ். எம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்
எம் .மோகன்ராஜ் என்ற மாணவன் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட , 46 முதல் 48 எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திருச்சி மாவட்டத்திற்கும் எஸ். எம் பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி
நாராயணன் பாராட்டி வெள்ளி பதக்கத்தையும் சான்றிதழ்களையும் மோகன்ராஜ் என்ற மாணவனுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் பா. சுவாமிநாதன் அவர்கள், உடற்கல்வி ஆசிரியர் எஸ். அனந்த பத்மநாபன் மற்றும் பயிற்றுனர்
என். எஸ் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.