Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

0

'- Advertisement -

 

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியமானதாகும். திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக பெரியசூரியூரில் நடப்பது சிறப்பாகும். ஜல்லிகட்டு போட்டி அதிக அளவில் நடத்த அரசு துணை நிற்க வேண்டும். ஒரு ஜல்லிகட்டு போட்டி நடத்துவது என்பது 20 கல்யாணம் நடத்துவதைவிட கடினம். ஜல்லிகட்டு போட்டி ஏற்பட்டு செய்து உள்ளனர். கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு ஆன்லைன் டோக்கன் வழங்கினால் ஒரே நேரத்தில் மாடுகள் வந்து குவிவது தவிர்க்கப்படும்” என்றார்.

Suresh

பெரியசூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி
மேலும், “ஜல்லிகட்டு போட்டி நடைப்பெறுவதற்கு விழா கமிட்டி, மாட்டின் உரிமையாளர், மாடுபிடி வீரர் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது. கடல்தாண்டி தமிழனின் பெருமை பறைசாற்றப்படுவது சிறப்பானது ஆகும். கடல்கடந்து நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன்.” என்றார்.

20 திருமணங்களை நடத்துவதை விட ஒரு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது சிரமம் என விஜயபாஸ்கர் கருத்து
தொடர்ந்து பேசிய அவர்,”உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற வேண்டும். எல்லா இடங்களிலும் ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவது, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.” என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.