விராலிமலை கடைவீதி வழியாக செல்லும் காவிரி குழாய் உடைப்பால் அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி குளம் போல் தேங்கி நின்று சாலையில் ஓடுவதால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கடந்த 2009 ல் ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லுார் காவிரி ஆற்றில் இருந்து காவிரி கரையில் உறிச்சு குழாய் அமைத்து இனாம்குளத்தூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் வரை சாலை ஓரங்களில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் காவிரி நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விராலிமலை கடைவீதி வழியாக புதுக்கோட்டை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலை தொடராமல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.