திருச்சி டி.வி.எஸ்.
டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம்
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் கே.கே.நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? இந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார் ?என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.