Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?

0

'- Advertisement -

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன் அந்த தெருவாசிகளால் மீட்கப்பட்டார்.

மழை காலங்களில் சாலைகள் பராமரிப்பு பணி நடைபெறாது எனவும் தோண்டப்பட்ட குழிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் பாதுகாக்கப்படும் எனவும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பல முறை அந்த பகுதியின் ஆளும்கட்சி கவுன்சிலரிடம் இந்த பாதாள சாக்கடை குழிக்கு தீர்வு கேட்டும் இன்று வரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் வார்டு பணிகளில் கூட சுனக்கம் காட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 17 வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா வார்டு பகுதிக்குள் வருவதில்லை அவரது மாமனார் பூக்கடை மோகன் தான் அனைத்து வேலைகளும் செய்கிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு தீர்வே இல்லையா என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் படி ஏற்படும் முன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொது மக்களின் எதிர்ப்பு.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.