Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி

0

'- Advertisement -

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி.
அறிக்கை:-

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி அவர்களின் ஆணைப்படி,

கழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அற்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (5.12.2023, செவ்வாய்கிழமை) முன்னிட்டு கீழ்க்கண்ட இடங்களில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்படும்.

5.12.2023, செவ்வாய்கிழமை
காலை 9மணி- சோமரசம்பேட்டை
காலை 9.30மணி- குழுமணி
காலை 10மணி- ஜீயபுரம்
காலை 10.15- பெட்டவாய்த்தலை
காலை 10.30- முசிறி கைக்காட்டி
காலை 11 மணி- துறையூர்
காலை 11.30- மண்ணச்சநல்லூர்

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொருப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என மு.பரஞ்ஜோதி வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.