திருச்சி கிராப்பட்டியில்
குடிபோதைக்கு அடிமையான தொழிலாளி பலி.
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 42 ).தொழிலாளியான இவர் குடி போதைக்கு அடிமையானார் இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவரை மனைவி மீட்டு காஜாமலையிலுள்ள மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீதேவி கணவன் இறப்பு பற்றி புதூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மாதவன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.