Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே குழந்தை இல்லாத மன உளைச்சலில் ஆடிட்டர் தற்கொலை.

0

திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45) இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு
திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. மேலும் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி மேனகா குழந்தைக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இருவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் கண்விழித்த மேனகா தனது கணவர் அருகில் இல்லாததால் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது அவர் சமையல் அறையில் உள்ள மின்விசிறி ஊக்கில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்,சப் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பத்மநாபனின் உடலை மீட்டு உடற்கூறாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்
குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் பத்மநாபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.