திருச்சியில் உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கம் சார்பில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பத்தில் ஒரு தேடல் லீக் போட்டி – 2023.
உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் தலைவர் டென்னிசன் தலைமையில் சிலம்பம் ஒரு தேடல் லீக் போட்டி.
தற்போது தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மக்கள் மத்தியில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்டெடுத்து வருகிறார்கள்.
அதன்படி திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள மொரைஸ் கிளாரியன் அரங்கில் உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் உலக வரலாற்றிலே தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை, சிலம்பத்தில் ஒரு தேடல் லீக் போட்டி – 2023 என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியை உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.யுனிவர்சல் ஜமாத் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு யுனிவர்சல் ஜமாத் நிறுவனத் தலைவர் பீமநகர் ராபிக் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த லீக் போட்டிகள் பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில், போட்டிகள் நடத்தபட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் …
அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிலம்பத்தை உலக அளவில் போற்றக்கூடிய போட்டியாக நிலை நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ஆகையால் வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களில் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர்களை தேர்வு செய்து ,சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்பார்கள்.
மேலும் தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நமது பாரம்பரிய கலை சிலம்பத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.