அதிக அளவு ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தமைக்காக திருச்சி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அரசு மருத்துவமனை டீன் பாராட்டி சான்று
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய இரத்ததான விழாவில் திருச்சி மாவட்டத்தில் சென்ற வருடம் அதிக அளவு கல்லூரிகளில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து கொடுத்துமைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நேரு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல்
மற்றும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியருமான முனைவர் இரா.குணசேகரன் மற்றும் திருச்சி மாவட்ட கல்லூரிகளில் உள்ள யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்களையும் பாராட்டும் விதமாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு பாராட்டுச் சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தார்.