Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவர்களுக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை.

0

 

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி கடலூர் மாவட்டம் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

இப்போட்டியில 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மினிஸ்டர் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 45 மாணவர்கள் கலந்து கொண்டு 13 தங்கம், 6 வெள்ளி, 16 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்று இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் சிலம்ப சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், பயிற்சியாளர்கள் சரவணன், கமலேஷ் லோகநாதன், சேஷாத்திரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி மாணவர்கள் 35 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஏசியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஏசியன் போட்டியிலும் நிச்சயமாக வெற்றி வாகை சூடு்வோம்.

தற்போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏசியன் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க விளையாட்டு துறை அமைச்சர் உதவி செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் சிலம்ப ஆசான்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.