திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சோந்தவா் முகமது ரியாஸ் (வயது 27). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் புதுச்சேரியைச் சோந்த இளம்பெண்ணைத் தொடா்பு கொண்டு பேசி வந்தாா். நாட்கள் செல்ல செல்ல உரையாடல் காதலில் முடிந்தது.
பின்னா் அந்தப் பெண் தனக்குத் தேவைப்படுவதாகக் கூறி பல தவணைகளில் இணைய வழியில் ரூ. 47 லட்சம் வரை பெற்றாா். இதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை முகமது ரியாஸ் நேரில் சென்று பாா்த்தபோது அவருக்குத் திருமணமாகி, அவருக்கு 19 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த ரியாஸ், பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அந்தப் பெண் பணத்தைத் தரமுடியாது எனக் கூறி மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து அவா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரிடம் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, இளம்பெண் போல பேசி பணத்தை மோசடி செய்த ஜீனாபானு (வயது 38 ) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
விசாரணையில் அந்தப் பெண் இதேபோல புதுச்சேரியை சோந்த ஒருவரிடமும் பேசி பல லட்சம் மோசடி செய்தவா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.