திருச்சியில்
கஞ்சா கடத்திய ஐ.ஜே.கே.
பிரமுகர் கைது.
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்
குணா என்கிற குணசேகரன் (வயது 53).
இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதான அவர் ஜாமீனில் வெளிய வந்தார். பின்னர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தார் என பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் கெம்ஸ் டவுன் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குணா 1350 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் குணசேகரனை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.