Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் பங்கேற்பு.

0

'- Advertisement -

 

திருச்சியில் மாபெரும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் நடைபெற்றுது, அதில் தமிழ்நாடு கேரளா,கர்நாடகா பாண்டிச்சேரி, அஸ்ஸாம், போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 1000 -க்கும் மேற்பட்ட சிலம்பம் வீர – வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர்.

இந்த போட்டியானது ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு,*வேல் கம்பு இது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் ,வெற்றிகோப்பைகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பெற்ற சிலம்ப வீராங்கனைகள் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் ஆசிய சிலம்பப் போட்டிகளில் பங்குபெற வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக

நாடளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று வெற்றி பெற்ற சிலம்பம் மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டினார்கள்.

மாநில மற்றும் மத்திய அரசிற்கான கோரிக்கை:

நமது பாரம்பரியக் கலையான சிலம்பக்கலையை பள்ளி,கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும், மேலும் சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சங்கர் மாநில மற்றும் மத்திய அரசிற்கான கோரிக்கை வைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.