திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப கருத்து உருவாக்கல் மையம் தொடா்ந்து செயல்படும் வகையில் அதற்கான ஒப்பந்தம் 2025 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில் நுட்பக் கழகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, திருச்சி தேசிய தொழில் நுட்ப கழக வளாகத்தில், விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப கருத்து உருவாக்கல் மையம் ஏற்படுத்தப்பட்டது. இதில், கல்வியாளா்கள், தொழில் நுட்ப வல்லுநா்கள், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மையங்களிடையே மாறி வரும் தொழில் நுட்பங்களை பகிா்ந்துகொள்வது, ஆய்வுகள் மேற்கொள்வது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மையம் வாயிலாக ரூ. 2 கோடி மதிப்பிலான 8 தொழில் நுட்ப ஆய்வு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திட்டங்களும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு தற்போதைய மற்றும் எதிா்காலத் தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை உள் நாட்டிலேயே உருவாக்குவது, தேசிய தொழில் நுட்பக் கழக மற்றும் தென்னிந்திய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியா்கள், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களை இந்த திட்டங்களில் ஈடுபடுத்தி அதில் உள்ள சவால்களுக்கான தீா்வுகளை காண வழிவகை செய்து, பல செயல் மாதிரி வடிவமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. மேலும் இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த புதன்கிழமை (ஆக.30) இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குநா் என். சுதீா்குமாா் தலைமையில் துணை மேலாண்மைக்குழு கூட்டம் இந்த மையத்தில் நடைபெற்றது. இதில், தற்போதைய ஆய்வுத் திட்டங்களை மெருகூட்டும் வகையில், ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டம் வகுக்கப்பட்டது.
இதன் வாயிலாக தேசியதொழில் நுட்பக் கழகத்தில் முழுவதுமாக முடிக்கப்பட்ட 3 ஆய்வு திட்டங்களின் செயல் மாதிரி வடிவமைப்புக்கள், திட்ட அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றை திட்ட அதிகாரிகள் எஸ்.எஸ். காா்த்திகேயன், ஆா்.பாண்டீஸ்வரி, எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் ஆய்வு மையக் குழுவினரிடம் சமா்ப்பித்தனா்.
விண்வெளி ஆய்வு மைய இணை இயக்குநா் நிஷாந்த்குமாா், மூத்த விஞ்ஞானி பெங்களூா் யு ஆா் ராவ், திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழக இயக்குநா் ஜி.அகிலா, முனைவா் ஜி. உமா, உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். மேலும் திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் இக் கருத்து உருவாக்கல் மையம் தொடா்ந்து செயல்படும் வகையில் அதற்கான ஒப்பந்தத்தை 2025ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நீட்டித்து கையொப்பமிடப்பட்டது.