Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் கடத்தி வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

0

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த ஒரு பயணியின் கைப்பையில் பசை வடிவிலான மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதித்தபோது தங்கத்தை பசை போல உருக்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 995.4கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.59லட்சத்து 28ஆயிரத்து 210 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை பயணியிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.