Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மைக்கில்ஸ் ஐஸ் கிரீம் 2வது கிளைக்கும் சீல். உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு அதிரடி.

0

 

திருச்சி தெப்பக்குளம் மெயின்காா்டுகேட் பகுதியில் உள்ள பழமையான பிரபல மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதாக, நுகா்வோா் ஒருவா் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாா் அளித்தாா்.

இதன்பேரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் நேற்று ஐஸ்கிரீம் கடையை ஆய்வு செய்தனா். ஆய்வில் கடை சுகாதாரமற்ற முறையிலும், கிருமித் தொற்று ஏற்படும் வகையிலும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் தர நிா்ணயச் சட்டம் 2006-இன் கீழ் அக்கடையின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி, சீல் வைத்து மூடினா்.

தொடா்ந்து, கடையிலிருந்து வழக்கு பதிவு செய்வதற்கு ஏதுவாக உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறையினா் தெரிவித்தனா்.

சில நாட்களுக்கு முன்புதான் திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கிளையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் ஐஸ் கிரீம் தயாரிக்கப்படுவதாக கூறி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.