திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து
போதை மாத்திரைகள் மற்றும் 4,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் சவுகத் அலி தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அசார் (எ) அசார் முகமது வயது (வயது 23), திருச்சி காந்தி மார்க்கெட் காமராஜர் நகரை சேர்ந்தவர் ரத்தினம் அவரது மகன் வசந்த் (வயது 18), திருச்சி இ.பி ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் சச்சின் (22)ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக திருவானந்தம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளையும், 4,500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்சி 6 வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான சஞ்சய் சச்சின் மீது ஏற்கனவே கொலை வழக்கும், வசந்த் மீது திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.