தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாளையொட்டி திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீரர்
தீரன் சின்னமலை யின் 218வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள தீரன் சின்னமலை
உருவச் சிலைக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டலம் 3-வது குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை மாவட்ட செயலாளர் சேகர், திமுக பகுதி செயலாளர்கள்
இ.எம் தர்மராஜ், மோகன், ராஜ்முகமது,
ஏ.எம். ஜி. விஜயகுமார், பாபு, மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.