டெல்டா பகுதியில் முதல் முறையாக திருச்சி காவிரி ஹார்ட் சிட்டியில் புதிய கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகம்.
காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டியில்
கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அறிமுகம்.
திருச்சி
காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் புதுமையான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் டி செந்தில்குமார் கூறும் போது,
காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இதயவியல் சிகிச்சை நிபுணர்களால் ஒரு புதுமையான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி உத்தி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்பிட்டல் அதெரெக்டாமி என்று அழைக்கப்படும் இப்புதிய மருத்துவ செயல்முறை உத்தியானது, தமிழ்நாட்டின் டெல்டா பிராந்தியத்தில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதயம் சார்ந்த இரத்தநாளங்களில் இறுகி கடினமாகியிருக்கின்ற கால்சியம் படிமங்களை உடைத்து, துகள்களாக்கி அகற்றுவதற்கும் மற்றும் இதன்மூலம் இரத்தநாளங்களில் அடைப்புகளினால் அதிக சிக்கலான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை மேற்கொள்வதற்கும் இது ஒரு புதிய வழிமுறையாகும்.
இரத்தக்குழாய் அடைப்பு அல்லது இரத்தநாள குறுக்கத்தில் படிந்து, இறுகியிருக்கின்ற கால்சியத்தை உடைத்து சிதைப்பதற்கு 1.25 மி.மீ. அளவுள்ள ஒரு வைர உலோகத்தினாலான கிரவுனை இந்த நவீன யுக்தியில் பயன்படுத்துகிறது. இதன்மூலம் ஸ்டென்ட்டைப் பொருத்துகின்ற கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை இது ஏதுவாக்குகிறது.
இந்த மருத்துவமனையின்
இதயசிகிச்சை நிபுணர் மற்றும் முதன்மை மின்-உடலியங்கியல் வல்லுநரான டாக்டர். ஜோசப், இந்த நவீன மருத்துவ செயல் முறையை வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் இதுவரை இந்த நவீன யுக்தியால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பயனடைந்திருக்கின்றனர். அந்த வசதி தற்போது நமது மருத்துவமனையில்
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஜோசப் பேசுகையில், இந்தியாவில் மிக சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நவீன உத்தி இது. சிறுநீரக நோய் பாதிப்புள்ள 69 வயதான ஒரு நோயாளிக்கு கடுமையான கால்சியம் படிம கரோனரி தமனி நோயும் கண்டறியப்பட்ட நிலையில், கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மருத்துவ செயல் முறையை பயன்படுத்தி உள்ளோம் என்றார்.
பேட்டியின் போது ஆப்ரேஷன் பிரிவு பொது மேலாளர் ஆண்ட்ரோஸ், நித்தியதாஸ், நிர்வாக மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி, பொது மேலாளர் மாதவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.