Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டு கொள்ளாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

 

திருச்சியில் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து
அதிமுகவினர்
ஆர்ப்பாட்டம் .

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து அரசு துறைகளிலும் தலை விரித்தாடும் ஊழல் ஆகியவற்றை கண்டித்தும் இவற்றை கண்டு காணாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும்,
தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் மாநகர், வடக்கு,தெற்கு, மாவட்ட அதிமுக சார்பில் மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் தலைமை கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,எம்.ஜி.
ஆர்.இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்கள்
சீனிவாசன்.பொன் செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் அரசு கொறடா மனோகரன்,
அவைத்தலைவர் அய்யப்பன்,ஆவின் சேர்மன் மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
இந்திராகாந்தி, பரமேஸ்வரி, மல்லிகா சின்னசாமி
அதிமுக நிர்வாகிகள் கே.சி.பரமசிவம், சுப்பு (எ) சுப்பிரமணி, பத்மநாதன், சிந்தாமணி முத்துகுமார், ஏ.டி.பி.ராஜேந்திரன், இலியாஸ், வெல்லமண்டி பெருமாள், அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், தென்னூர் அப்பாஸ், சகாபுதீன், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன்,முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக் மிரா ,கலீலுல் ரகுமான், என்ஜினீயர் இப்ராம்ஷா,வக்கீல்கள் சுரேஷ், தாமரை செல்வன், ஜெயராமன், கங்கை செல்வன், சசிகுமார், வடிவேல்சாமி மற்றும் அப்பாக்குட்டி,ஜெயக்குமார், உடையான்பட்டி செல்வம், காசிபாளையம் சுரேஷ்குமார்,ஆரி, சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன்,கல்லுக்குழி முருகன், டைமன் தாமோதரன், பிளாட்டோ,சதீஷ்குமார், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன், ஐ.டி பிரிவு நாகராஜ், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, எடத்தெரு பாபு,ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், ஜெயகுமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், சிங்கமுத்து,வண்ணார்பேட்டை ராஜன், நத்தர்ஷா, ரோஜர், பொம்மாச்சி பாலமுத்து,வெல்ல மண்டி கன்னியப்பன் கிதிர்முகமது,
என்ஜீனியர் ராஜா, நல்லுச்சாமி, ஜெரால்டு, குருமூர்த்தி, நாட்ஸ் சொக்கலிங்கம்,காசிபாளையம் சுரேஷ் குமார்,ஈஸ்வரன், முகமது யுசுப்,எனர்ஜி அப்துல் ரகுமான்
எம்.கே.குமார்,சாத்தனூர் வாசு,
பழனியப்பன்,கிருஷ்ணன்,அரப்ஷா,கேபி ராமநாதன், சதீஷ்குமார்,,ஜெகதீசன்,கதிர்வேல்,
தர்கா காஜா, கயிலை கோபி, மீன்கடை சுலைமான், கே.சி.பி.ஆனந்தன், கமலஹாசன், வக்கீல் தினேஷ்பாபு, பொன்ராஜ், ரமணி லால், ராமலிங்கம், கண்ணன்,ஆவின் குமார், ராஜசேகரன், பாலக்கரை சதர், பீமநகர் சீனிவாசன், ராஜ்மோகன்,எடத்தெரு பார்த்திபன், எட்வர்டு, பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அறிவழகன் விஜய்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், அறிவழகன்,ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன் ஜெயக்குமார்,நடராஜ், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி, நிர்வாகிகள் பிரியா சிவகுமார், கலைமணி, எஸ்.வி.ஆர்.ரவிசங்கர், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி,வி.என்.ஆர்.செல்வம், அழகாபுரி செல்வராஜ், நெடுமாறன்,துறையூர் பிரகாஷ்,இ.பி ஏகாம்பரம், சமயபுரம் ராமு,எம்பி.பிரகாஷ், சேனை செல்வம்,
மண்ணச்சநல்லூர் ரமேஷ், படையப்பா ரெங்கராஜ், திருபுகழ், நெடுந்தெரு செந்தில் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னசாமி,நிர்வாகிகள் அருணகிரி, நெட்ஸ் இளங்கோ, அருண் நேரு, அசோகன் சிவக்குமார்,சூப்பர் நடேசன், வக்கீல் அழகர்சாமி, சண்முகபிராபகரன்,
,எஸ்.பி பாண்டியன், பாலசுப்பிரமணியன், பாஸ்கர், ராவணன், கார்த்திக், துவாக்குடி சுரேஷ்குமார், பேராசிரியர் பாபு மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.