Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி.

0

'- Advertisement -

 

திருச்சி சாத்தனூர் பெரியகுளத்தில் மூழ்கி
2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.

திருச்சியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம் மகன் சையது கமருதீன்
(வயது 11), அதே பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது மகன் முகமது ஆதில் (6). அருகருகே வீட்டைச் சேர்ந்த இருவரும் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று (திங்கள்கிழமை) மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த இருவரும், வீட்டிலிருந்த யாரிடமும் விவரம் கூறாமல் வெளியே சென்று விட்டனர். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடி உள்ளனர்.


சுற்றுப்புற பகுதிகளில் எங்கு தேடியும் இருவரையும் காணவில்லை. இந்நிலையில் எதேச்சையாக புதுக்கோட்டை சாலை இடையே உள்ள அரை வட்டச் சாலை பகுதியில் சாத்தனூர் பெரிய குளம் அருகே தேடிச் சென்றபோது, குளத்துக் கரையில் இருவரது சைக்கிள்களும், அவர்களது ஆடைகளும் கிடந்துள்ளன.
இதனையடுத்து சந்தேகம் கொண்ட உறவினர்கள் திருச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்டனர். இதில் இரவு 10.30 மணி அளவில் ஒருவரது உடலும், 11:30 மணியளவில் மற்றொரு சிறுவனின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.