திருச்சி அருகே பட்ட பகலில் கணவன்,
மனைவி சரமாரி வெட்டி கொலை.
திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார், அதைத் தொடர்ந்து அவர் தனது மனைவி சாரதாவுடன் தோட்டத்து குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர்கள் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர் குத்தகை தகராறு காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பட்ட பகலில் கணவன் மனைவி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் உப்பிலியபுரம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது