Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜி கார்னரில் பேராசிரியையிடம் செயின் பறிப்பு.தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்கள்.

0

 

திருச்சி ஜி கார்னரில்
கல்லூரி பேராசிரியையிடம்
தங்கச்சங்கிலி பறிப்பு.

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவியர் பெனிடிக், இவரது மனைவி பேபி நிர்மலா ( வயது 50). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஜி கார்னர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜி கார்னரில் தொடர்ந்து நடந்து வரும் குற்ற சம்பவங்கள்.
தொடர்ந்து இரவு நேரங்களில் தனியாக நடந்து வரும் நபர்களிடம் செல்போன்,வாட்ச் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கத்தியை காட்டி மிரட்டி பிடுங்கி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் காவல்துறை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.