Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிளஸ் டூ தேர்வு முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு.

0

 

பிளஸ் டூ தேர்வில்
திருச்சி மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 34,392 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்
மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.

இதில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வினை 258 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும்
தனித்தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வு எழுதினர்.
இதில் 14,390 மாணவர்களும், 16,520 மாணவிகளும்
என மொத்தம் 30,910 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்.
இதில் 13,520 மாணவர்கள்,16,159 மாணவிகள் என மொத்தம் 29,679 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.02 சதவீதம் ஆகும். 1,231 பேர் தேர்ச்சி பெறவில்லை.

இதில் 3,482 பேர் தேர்வு எழுத வரவில்லை
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 95.93 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு 96.02 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் ஆதி திராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் 88.78 சதவீதம் பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் 99.56 சதவீதமும், முழு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 96.74 சதவீதமும், அரசு பள்ளி மாணவர்கள் 92.74சதவீதமும், பகுதி அளவு அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.51 சதவீதமும், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 99.02 சதவீதமும், சுயநிதி (டி எஸ் சி) பள்ளி மாணவர்கள் 98.41சதவீதமும், பழங்குடியின நல பள்ளி மாணவர்கள் 97.65தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 258 பள்ளிகளில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.12 அரசு பள்ளியும், 75 தனியார் பள்ளிகளும் அடங்கும்
பிளஸ் டூ தேர்வில் திருச்சி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது.

சென்ற ஆண்டு 12-ஆம் இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் இந்தாண்டு சரிந்து 13வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.