திருவெறும்பூர்:
மனைவி உடனான
கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி கொத்தனாருக்கு கத்திக்குத்து.
திருச்சி வடக்கு காட்டூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51).
கொத்தனாரான இவருக்கும் வடக்கு காட்டூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலை அறிந்த அவரது கணவர் ஜெகன் (வயது 40) அதிர்ச்சி அடைந்தார். லாரி டிரைவரான இவர் வெளியூர் செல்லும் நாட்களில் விஜயராமன் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஜெகன் தனது மனைவி மற்றும் கொத்தனார் விஜயராமனை கண்டித்தார். இதனை கொத்தனார் கண்டுகொள்ளாமல் மீண்டும் அதே பெண்ணுடன் தொடர்பில் இருந்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் வடக்கு காட்டூர் பாரதிதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த நல்லான் (வயது 40), வடக்கு காட்டூர் காந்திநகர் ஒன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ராமர் (வயது 49 )ஆகிய நண்பர்களுடன் சென்று பாப்பாக்குறிச்சி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த விஜயராமனிடம் தகராறு செய்தார். பின்னர் ஜெகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர்.
இதில் விஜயராமனுக்கு இடது கை விரல் மற்றும் வலது பக்க கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வருகின்றனர்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
தப்பி ஓடிய நல்லான்,ராமர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.