Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:டாஸ்மாக் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளையர்கள் ஏமாற்றம்.

0

 

பொன்மலையில் பரபரப்பு
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
லாக்கரில் வைத்த ரூ. இரண்டே முக்கால் லட்சம் தப்பியது.

திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56) இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள்
வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்த பின்னர் சூப்பர்வைசர் செல்வராஜ் விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்தி 77 ஆயிரத்து 80 பணத்தை எண்ணி கடை லாக்கரில் வைத்து பூட்டினார்.

பின் கடை ஷட்டரை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் காலை 7 மணி அளவில் டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த சிலர் செல்வராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு டாஸ்மாக் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் உடனடியாக பொன்மலை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த பணம் அப்படியே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டனர்.
டாஸ்மார்க் ஷட்டர் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் லாக்கர் பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரியின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.