Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மது குடிக்க தாயார் பணம் தராததால் வாலிபர் தற்கொலை.

0

'- Advertisement -

 

ஜீயபுரத்தில்
மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை.

திருச்சி அந்தநல்லூர் பாலாகி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்
காத்தப்பெருமாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மனைவி தேவிகா (வயது 52). இவர் குளித்தலை அரசு கருவூலத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதியரின் மகன் கோகுல்நாத் (வயது 28). இவர் குடிக்கு அடிமையாகி விட்டார். இதனால் அவரது தாயார் மகனின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்தார். அவ்வப்போது மகனுக்கு அறிவுரை கூறி கண்டித்து வந்தார். இருந்தபோதிலும் அவரால் மது பழக்கத்தை விட முடியவில்லை. இந்த நிலையில் மது குடிக்க தனது தாயாரிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான கோகுல்நாத் தாயார் வேலைக்கு சென்ற பின்னர் பூச்சி மருந்து எடுத்து குடித்து விட்டார்.

உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் கோகுல்நாத் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாயார் தேவிகா ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.