ஞாபக மறதி காரணமாக
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கே.என். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52)
இவர் திருவெறும்பூர் அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தனுஸ்ரீ (வயது19). இவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. லேப் டெக்னீசியன் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில்
பருவ தேர்வு முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனுஸ்ரீ ஊர் திரும்பினார். பின்னர் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இதற்கிடையே வெகு நேரம் உட்கார்ந்து படிக்கும் பாடங்களும் அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு மறந்து போனதாக தெரிகிறது.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தனுஸ்ரீ தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் ஷாலில் தூக்கு போட்டார். பின்னர் பெற்றோர் மகளை மீட்டு வாளாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவி தனுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை ரவி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.