திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா.அகிலாவின் தந்தை வையாபுரி விவசாயி. அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கி உள்ளார்.
இந்த நிலத்தை தனது தந்தை பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்துள்ளார்.
இவரது மனுவை பரிசீலனை செய்த அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் (வயது 44) என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கண்டித்து கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அகிலா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனின் ஆலோசனையின் பேரில், இன்று (31.3.2023) மதியம் சுமார் 2 மணியளவில் அய்யம்பாளையம் விஏஓ அலுவலகத்தில் அகிலாவிடமிருந்து விஏஓ பழனியம்மாள் ரூபாய் ரூ.5,000 லஞ்ச பணத்தை கேட்டு வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அகிலா வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து, அந்த நோட்டுகளை வாங்கி சோதனையிட்டனர். அகிலாவின் தந்தையாரால் வாங்கப்பட்ட 29 சென்ட் நிலத்தின் மொத்த மதிப்பே ரூ.12000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து. விஏஓ பழனியம்மாள் கைது செய்யப்பட்டார்.