முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் தில்லைநகர் பகுதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவபடத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் , பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, மற்றும் நாட்டாமை சண்முகம்,விநாயகமூர்த்தி,ஷர்மிளா ஆறுமுகம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.