உரிமையாளர் நேபாளம் சென்ற நிலையில்
வீட்டில் பணியில் இருந்த
கூர்கா திடீர் மாயம்.
திருச்சி துவாக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர்ஷா (வயது 68).
நேபாள நாட்டைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த தனது உறவினர் நாராயணன் சிங் (வயது 45) என்பவரை பணிக்கு அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயின் இறுதிச்சடங்கிற்காக பகதூர்ஷா தாய்நாடு சென்றார்.
பின்னர் கடந்த 28ஆம் தேதி திருச்சி திரும்பினார்.
அப்போது கூர்கா நாராயண சிங்கை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து பகதூர்ஷா நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.