Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் தம்பதியினருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

0

 

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

நற்றமிழ் முல்லை தமிழ்ச்சங்கம் அறக்கட்டளை, எம்.ஏ.எம். ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை இணைந்து சங்கப் பெண் பாற் புலவர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் விருது வழங்கும் விழா திருச்சி தமிழ்சங்கத்தில் நடைபெற்றது.

பத்மஸ்ரீ சுப்புராமன்,மாநில செயலாளர் கவிஞர் செல்வநாயகம், திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை வெங்கடேசன், சொல்லின் செல்வர் குத்தாலம் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் பகவத் கீதா உள்ளிட்டோர் முன்னிலையில்
நற்றமிழ் முல்லை தமிழ் சங்க அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் ரஞ்சனி ஆதரவற்ற
அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.