Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரிச்சூர் செல்வம், காயத்ரி ரகுராம் குறித்து திருச்சியில் சூர்யா சிவா பேட்டி.

0

ரெளடியை ரௌடி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது – வரிச்சியூர் செல்வம் குறித்து திருச்சி சூர்யா சிவா பேட்டி

தலைக்கவசம் இல்லாமல் கழுத்து நிறைய நகைகளுடன் புதுமணப்பெண் போல் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பைக் ஒட்டிச் சென்றது சர்ச்சையானது. அதனை தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.
அதில் காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேஷ், உள்ளிட்ட ஐந்து பேர் ஹோட்டலில் உணவருந்தினர். அங்கு எதேச்சையாக சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார்
.
அதனை எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சூர்யா அந்த புகைப்படத்தை டிவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார் என வரிச்சூர் செல்வம் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் திருச்சி சூரிய சிவா திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

வரிச்சியூர்
செல்வம் தன்னை ரவுடி என சொல்லாதீர்கள் என்கிறார்.
ரௌடியை வேறு என்னவென்று சொல்வது. ரௌடி என்று தானே சொல்லமுடியும்.
அந்த புகைப்படத்தை நான் அகற்றிவிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் பேசியுள்ளார். அன்று இரவு காயத்திரி ரகுராம் எங்கிருந்தார் என்பது போலீசாருக்கே தெரியவில்லை.
செல்வம் கெஞ்சியதால் போட்டோவை அகற்றினேன். அவர் மிரட்டியதாலோ, ரௌடி என்பதாலோ போட்டோவை அகற்றவில்லை. அப்போது காயத்திரி ரகுராமுடன் இருந்த தனிப்பட்ட விமர்சனங்களின் வெளிப்பாடாக அந்த புகைப்படத்தை வெளியிட்டேன். அது குறித்து காயத்திரி ரகுராம் எந்த விளக்கமோ, மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை. திருச்சி சூரியா வாகிய நான் பாஜக தொண்டராக தொடர்கிறேன்.
எனது ராஜினாமாவை பாஜக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
2026 ஆம் ஆண்டு வரை அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக இருப்பார்.
2026 இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது அண்ணாமலை தான் முதல்வர். அதனை தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவரே பாஜகவின் தலைவராக இருப்பார். நான் அண்ணாமலையின் ஏ டீம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.