திருச்சியில் அரசு பள்ளி, தபால் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள் கொள்ளை.
திருச்சியில் 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகை பொருட்கள் திருட்டு .

திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியில் துணை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக தமயந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தபால் நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ தபால் நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 3,500 பணம் மற்றும் 2 செல்போன்களை திருடி கொண்டு ஓடி விட்டனர்.பிறகு வீட்டிலிருந்து தபால் நிலையத்திற்கு வந்த தமயந்தி அங்கு கதவு உடைக்கப்பட்டு பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி இ.பி. ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பூட்டியிருந்த ஸ்டோர் ரூம்மை மர்ம
ஆசாமிகள் உடைத்து உள்ளே சென்று அங்கே இருந்த மின்விசிறி மற்றும் பழைய பேட்டரிகளை திருடி கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி சாஸ்திரி சாலையில் ஸ்டேஷனரி கடை உள்ளது.சம்பதவன்று சண்முகராஜா என்பவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பூட்டு தடவை உதை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 90 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.இது குறித்து சண்முகராஜன் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டேஷனிரியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.ஆக மொத்தம் திருச்சி மாநகரில் நடந்த மூன்று கொள்ளை சம்பவங்களில் சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பணம், நகை பொருட்கள் திருட்டுப் போய் உள்ளது.